tamilnadu

புதுச்சேரி, வேலூர் முக்கிய செய்திகள்

புதுவையில் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.6 உயர்வு
புதுச்சேரி, ஆக.29-புதுச்சேரி சட்டப்பேரவiயில் வியாழனன்று(ஆக.29) முதல மைச்சர் நாராயணசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், புதுவையில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தித்தர வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.  இதற்கு காரணம், கடந்த 2014-ஆம் ஆண்டு க்கு பிறகு  கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. 5 ஆண்டுகளில்  மாட்டுத் தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலையும், பராமரிப்புச் செலவும் பன்மடங்காக உயர்ந்துள்ளது. எனவே, புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க கறவை மாடுகள் வைத்திருப்போர் பால் உற்பத்தி தொழிலில் லாபம் அடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பசும் பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு ரூ.28-லிருந்து  ரூ.32 ஆக உயர்த்தியுள்ளது. இதை பின்பற்றி இங்கும்  கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு பால் சங்கங்களுக்கு வழங்கும் பால் கொள்முதல்  விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.34 ஆக, அதா வது லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி வழங்கப்படும். பதப்படுத்தும்  செலவு, போக்குவரத்து, அலுவலக செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பாண்லே பால் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. அனைத்து வகையான பாலுக்கும் லிட்டர்  ஒன்றுக்கு ரூ.6 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல்,  விற்பனை விலை உயர்வு ஆக.30 முதல் அமலுக்கு வரும்.  இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை
வேலூர், ஆக.29-வேலூரில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த 12 உதவி  சிறை அதிகாரிகளுக்கு 24 வது அணி 9 மாத பயிற்சி கடந்த  ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இப்பயிற்சியின் நிறைவு  விழாவிற்கு ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் தலைமை தாங்கி னார். துணை இயக்குனர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். சிறைத்துறை ஏடிஜிபி அபாஷ்குமார் கலந்து கொண்டு, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கை யில், “சிறைகளில் நன்னடத்தை கைதிகள் தயாரிக்கும் பொருட்  களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறைகளில் காலியாக  உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.