tamilnadu

புதுச்சேரி, வேலூர் முக்கிய செய்திகள்

தலித் மாணவர் நிதி மடைமாற்றத்தை கைவிட அரசுக்கு கோரிக்கை

புதுச்சேரி, ஜூலை 23- சிறப்புக்கூறு நிதியை  மடைமாற்றம் செய்வதை புதுச்சேரி அரசு  கைவிட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிர தேச மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பிரதேச 3வது சாதிஒழிப்பு மாநாடு  வில்லியனூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பிரதேசத் தலைவர் இராச.ஜெயராமன் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலத் தலைவர் சம்பத் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். மாநில துணைத் தலைவர் சாமிநாதன், புதுச்சேரி சமூக  நலத்துறை அமைச்சர் கந்த சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், தலித் கூட்டமைப்பு தலை வர் நீலகங்காதரன் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். பிரதேச பொதுச்செய லாளர் ராமசாமி வேலை  அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் கொளஞ்சி யப்பன், கலிவரதன், நில வழகன்,அரிகிருஷ்ணன், தெய்வசிகாமணி, முனி யாண்டி, விநாயகம், ரமேஷ்,  ராமகோபால், தட்சணா மூர்த்தி உட்பட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.

நிர்வாகிகள்
இம்மாநாட்டில் புதுச்சேரி பிரதேச புதிய தலைவராக வே.கு.நிலவழகன், பொதுச் செயலாளராக ஜி.ராமசாமி, பொருளாளராக ஆர்.ரமேஷ் உட்பட 24 பேர் கொண்ட புதிய பிரதேசக் குழு தேர்வு செய்யப்பட்டது.

தீர்மானம்
புதுச்சேரி பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்கள் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் தொகையை தலித் மக்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கு மாறாக  அந்நிதியை வேறு துறைக்கு  மடைமாற்றம் செய்வதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்விவரை பயி லும் தலித் மாணர்வக ளுக்கான நிதியை காலதாமத மின்றி வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்த உண்டு உறைவிடப்பள்ளியை விரி வாக துவக்க வேண்டும். தலித் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்  ளிட்ட பல்வேறு தீர்மானங்  கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது.

கதிர் ஆனந்த் வெற்றிக்கு சிபிஎம் தீவிர பிரச்சாரம்

வேலூர், ஜூலை 23- வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டி யிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பா ளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற தீவிர பிரச்சாரம்  செய்வதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி யின் மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. என்.காசிநாதன் தலைமையில் நடந்த மாவட்டக்குழு கூட்டத்தில் மாநில செயற் குழு உறுப்பி னர் எஸ்.செல்வசிங், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற் குழு, மாவட்ட குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- இம் மாதம் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி  வரை இம்மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளி லும் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்  கூட்டம் நடத்துவது என்றும் கட்சி தொண்டர்களுடன் தினசரி தீவிரப்பிரச்சாரம் செய்வதென்றும் என்றும்  முடிவு செய்யப்பட்டது.  28 ஆம் தேதி 200 கொண்ட  குழுக்கள் தொகுதியில் ஒரு லட்சம் வீடுகளில் துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரச்சாரம் செய்வன  தீர்மானிக்கப்பட்டது. வேலூர் மக்களவை தொகுதி பொறுப்பா ளராக, மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, வேலூர்  சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.நாராயணன், வி.நாகேந்திரன், அணைக்  கட்டு தொகுதிக்கு  என்.காசிநாதன்,மகாலிங்கம், கே.வி. குப்பம் தொகுதிக்கு எஸ்.சாமிநாதன், கே.வி.சீனி வாசன், குடியாத்தம் தொகுதிக்கு காத்தவராயன்,  குணசேகரன், ஆம்பூர் தொகுதிக்கு வ. அருள்சீனி வாசன், வாணியம்பாடி தொகுதிக்கு எம்.பி.ராமச்  சந்திரன், இந்துமதி ஆகியோர் தொகுதி பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தயாநிதி தெரிவித்தார்.