வேலூர், பிப். 2- விஐடியில் மேம்பட்ட அறிவியல் பள்ளியின் கணிதத்துறை சார்பில் கணிதப் போட்டி நடைபெற்றது. இதில் 51 பள்ளிகளை சேர்ந்த (6 முதல் 12 வகுப்பு வரை) 2,200 மாணவர்கள் கலந்து கொண்டனர். வினாடி வினா, கட்டுரைப் போட்டி, கணித புதிர் போட்டி, கணித மாதிரி போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி போட்டியில் காரணாம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தையும், வாணியம் பாடி இஸ்லாமிய ஆண்கள் உயர்நிலைப் பள்ளி இரண்டா மிடத்தையும், பெரியகுக்குண்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. ஆங்கில வழிக்கல்வி போட்டியில் சன்பீம் பள்ளி முதலிடத்தையும், சென்னான்குப்பத்தை சேர்ந்த விஜய லட்சுமி பள்ளி இரண்டாம் இடத்தையும், லட்சுமி கார்டன் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விஐடி உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக்கான இயக்குனர் மையத்தின் பேராசிரியர் டாக்டர்.பி அறிவுடைநம்பி, டாக்டர் உஷா ஈஸ்வரன் (சி.இ.ஒ - எஸ்.இ.இ.கே), மேம்பட்ட அறிவியல் பள்ளியின் டீன் மேரி சாரல், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கௌசல்யா, டாக்டர் பி.ருசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.