வேலூர், ஆக. 7- விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவன அலுவலகப் பொருட் களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றனர். வாலாஜாபேட்டையை அடுத்த குடி மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசீலன் (35). தனியார் நிறுவன தொழிலாளியான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு ராணிப் பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும் பத்தினர் இழப்பீடாக ரூ. 30 லட்சம் கோரி ராணிப்பேட்டை 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் சமரசத் தீர்வு காணப்பட்டு இழப்பீடாக ரூ. 6.25 லட்சம் வழங்க ராணிப்பேட்டையில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறு வனத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டாக இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி குணசீலன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இழப்பீட்டுத் தொகையான ரூ. 6.25 லட்சம், கால தாமதத்துக்காக ரூ. 25 ஆயிரம் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ. 6.50 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் உத்தரவிட்டார். தவறும்பட்சத்தில் அந்தத் தொகைக்கு ஈடான மதிப்பில் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டது. அதன்பேரில் நீதிமன்ற ஊழியர்கள் டிசில்வா, மகேந்திரன், மனுதாரர் வழக்குரை ஞர் வெங்கடேசன், குணசீலன் மனைவி மீனாட்சி ஆகியோர் ராணிப்பேட்டை கிருஷ்ண கிரி டிரங்க் சாலையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்திற்குகு சென்றனர். அங்கி ருந்த அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சிய டைந்த காப்பீட்டு நிறுவன கிளை உதவி மேலாளர் சிவக்குமார், ஒரு நாள் அவகாசம் தரும்படியும், அதற்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வும் நீதிமன்ற ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். இதனால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.