வேலூர், ஜூலை 28- வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து போலி டாக்டர்களிடம் மக்கள் சென்று ஏமாறாதவண்ணம், அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் மருத்துவம் படிக்காமல் நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து வந்த பத்து போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது போலி மருத்துவமனைகளும் சீல் வைக்கப்பட்டது. இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் பொதுமக்கள் போலி மருத்துவர்கள் பற்றிய தகவல் அறிந்தால், மாவட்ட ஆட்சியரின் குறைதீர்வு வாட்ஸ்ஆப் எண் 94980 35000-க்கு தொடர்பு கொண்டு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பலாம். போலி மருத்துவர்களும் கிளினிக்கு களும் வருமாறு: வேலூரில் கிருஷ்ணமூர்த்தி - கீதா மருத்து வமனை சைதாப்பேட்டை, சீனிவாசன் - மகி மெடிக்கல்ஸ் வசந்தபுரம் மஞ்சுளா - மஞ்சுளா கிளினிக் பென்னாத் தூர், குல்னாஸ்ருஜி - மதானி கிளினிக் கொணவட்டம் , நளினி - மோகன்ராஜ் கிளி னிக் முருக்கேரி, அரியூர், காந்தி - குமரன் மருத்துவமனை காவனூர், காட்பாடியில் பாரதி -பாரதி கிளினிக் கார்ணாம்பட்டு, பொன்னரசன் கலை கிளினிக் கார்ணாம்பட்டு, நரசிம்மன் - டிசி குப்பம் அணைக்கட்டு, பாபு - மேல்ஆலத்தூர்,குடியாத்தம், இதனை மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.