tamilnadu

img

டெங்கு காய்ச்சல்: அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,அக்.22- டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை திமுகவினர் துரிதப்ப டுத்த வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக்  குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா அறிவால யத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிலவேம்புக் குடிநீரை பொது மக்களுக்கு வழங்கினார். முன்னதாக அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்ற அவர், தன்னை உறுப்பினராக பதிவு செய்து  கொண்டார். நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.