tamilnadu

img

மின்வாரிய உழைக்கும் பெண்கள் 9-வது மாநில மாநாடு

வேலூர், மே 12-மின்வாரிய உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் 9-வது மாநில மாநாடு காட்பாடியில் தோழர் சி.நாகேஸ்வரி நினைவரங்கத் தில் நடைபெற்றது. முன்னதாக ஆக்சிலியம் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் மாநாட்டு அரங்கை வந்தடைந்தது. பின்னர் நடந்த மாநாட்டிற்கு மாலா, பனிமலர் ஆகியோர் தலைமை வகித்தனர். கருணாம்பிகை அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் எம்.கோவிந்தராஜ் வரவேற்றார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில அமைப்பாளர் எம்.மகாலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொருளாளர் வெங்கடேசன் வாழ்த்திப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்தும் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலபொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் பேசினார்.

தீர்மானங்கள்

த்ததை கைவிட்டு ஒரே துறையாக மாற்ற வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிதாக நிரப்பப்பட உள்ள கேங்மேன் பணியிடங் களுக்கு ஏற்கனவே பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பெண்களுக்கு தனியான ஓய்வறை, கழிவறை, குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். மின்சார சட்டத்தில்மத்திய அரசு கொண்டுவர உள்ள மக்கள் விரோத திருத்தங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிர்வாகிகள் 27 பேர் கொண்ட குழுவும், மாநில அமைப்பாளராக எம். தனலட்சுமி, இணை அமைப்பாளர்களாக எம்.சாலட், எம்.பனிமலர், ஆர்.கருணாம்பிகை, விஜயலட்சுமி பாக்கியலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.