tamilnadu

முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே தண்ணீர் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்,செப்.12-  பூமி போன்ற வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு எக்ஸோபிளேனட்டின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய மண்டலத்திற்கு வெளியே நாசாவின் கெப்லர் விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கே 2-18 பி   என்ற  நட்சத்திரத்தில்  நீர் திரவ வடிவத்தில் இருக்க முடியும் என்ற நேச்சர் ஆஸ்ட்ரானமி இதழில்  கூறப்பட்டு உள்ளது. “பூமியைத் தவிர வேறு  கிரகங்களில்  உயிர்கள்  வாழக்கூடிய தண்ணீரைக் கண்டுபிடிப்பது என்பது  நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமானது” என்று யு.சி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் ஏஞ்சலோஸ் சியாராஸ் தெரிவித்துள்ளார்.  “கே 2-18 பி பூமியின் 2.0’ அல்ல”  பூமி தனித்துவமானது  என்று அவர் கூறினார்.  பூமியுடன் ஒப்பிடுகையில், பூமியின் வளி மண்டலத்தில் நீராவியின் சதவீதம் துருவங்களுக்கு மேலே 0.2 சதவீதத்திற்கும், வெப்பமண்டலத்தில் நான்கு சதவீதம் வரை வேறுபடுகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கும் சான்றுகள் இருந்தன. நைட்ரஜன் மற்றும் மீத்தேன் கூட இருக்கலாம். ஆனால் தற்போதைய தொழில்நுட்பத்துடன் கண்டறிய முடியாத நிலையில் உள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த கிரகத்தின்  மேற்பரப்பில் பெருங்கடல்களைக் கொண்டுள்ளது என்று நாம் கருத முடியாது, ஆனால் அதுவும் சாத்தியமாக கூடும். இன்றுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸோபிளானெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இது ஒரு பாறை மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை தண்ணீருடன் இணைப்பதில் முதன்மையானது என கூறப்படுகிறது. வளிமண்டலங்களைக் கொண்ட பெரும்பாலான எக்ஸோபிளானெட்டுகள் மாபெரும் வாயு பந்துகள் மற்றும் தரவு கிடைக்கக்கூடிய சில பாறை கிரகங்களில்  எந்த வளிமண்டலமும் இல்லை என்று தெரிகிறது.

;