tamilnadu

img

கொரோனா வைரஸ்.... புல்லட் ரயிலை விட வேகமாக பரவும் தொற்று... கடும் பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா

வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2991-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,058-ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றைகட்டுப்படுத்த அரசு விதித்த சில கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஸ்பெயின் மக்களை அந்நாட்டு காவல்துறையினர் பொறுப்பற்ற மக்கள்என விமர்சித்துள்ளனர்.அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலர், மருத்துவர்களின் அனுமதி இன்றி அவர்களே வீட்டிற்குசென்றதாக அந்நாட்டு காவல் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

நியூயார்க்கில் அதிவேகமாக பரவும் கொரோனா
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது.அமெரிக்காவில் 55,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 25,000 பேர் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள்.அமெரிக்காவில் கொரோனா பலி 800 ஆகஅதிகரித்துள்ளது. அதில் நியூயார்க்கில் மட்டும்குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்கில் ஒவ்வொரு மூன்று நாட்களுக் கும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. புல்லட் ரயில்களை விட கொரோனா வைரஸ்வேகமாக பரவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு தெரிவித்தார். 30,000 சுவாச கருவிகள் தேவைப்படும் இடத்தில் வெறும் 7000 சுவாசகருவிகள் மட்டுமே உள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடாக சீனா இருக்கிறது. இரண்டாவதாக ஐரோப்பாவின் இத்தாலியில் நாளுக்கு நாள்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த வரிசையில் அடுத்துநியூயார்க் இடம் பெறலாம் என்ற அச்சம் நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதனிடையே தொடர்ந்து கடும் பாதிப்பை இத்தாலி சந்தித்து வருகிறது. அந்நாட்டின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அலுவலகங்கள், விடுதிகள், திரையரங்குகள் என பொதுஇடங்களில் பல வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

சவூதியில் முதல் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் சவூதி அரேபியாவில் முதல் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானிற்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்டநாடாக சவூதி அரேபியா கருதப்படுகிறது.10 மில்லியன் மக்கள் தொகையை கொண்டஜோர்டான் நாட்டில் அந்நாட்டு அரசு மக்களுக்குமருந்து, உணவு, எரிவாயு என அத்தியாவசிய தேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளது. ஜோர்டான் நாட்டின் பல இடங்களில் மக்கள் நீண்டஇடைவெளியில் வரிசையாக நின்று உணவுகளை வாங்கி செல்லும் காட்சிகளை அந்நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

விதிகளை பின்பற்றும் வகையில் நீண்ட இடைவெளிவிட்டு வரிசையில் நின்று உணவு வாங்கிச்செல்லும் மக்களை அந்நாட்டு அமைச்சர் பாராட்டியுள்ளார்.ஏற்கனவே நகர வீதிகளில் நடமாட தடைவிதித்த ஜோர்டான், தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிவித்தது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப் படுத்த உலகிலேயே மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நாடாக ஜோர்டான் அறியப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ஓர் ஆண்டு கால சிறை தண்டனையை அந்நாடு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் நிலை என்ன?
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 878 ஆக உள்ளது.இந்தியாவை காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பாகிஸ்தான் அரசு, இன்னும் அந்நாட்டில் முழு அடைப்பை அறிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சில மாகாணங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் மக்கள் நடமாட தடை விதிக்கப் பட்டுள்ளது.எகிப்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19. எனவே அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டு மக்கள் இரவு நேரத்தில் வெளியே நடமாட தடை விதித்துள்ளது. மாலை 7 மணி முதல்காலை 6 மணி வரை மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய மாணவர்கள்
வங்கதேச எல்லையில் இந்திய மருத்துவ மாணவர்கள் 100 பேர் இந்திய எல்லைக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்திய மாணவர்கள் தங்கள் எல்லையிலிருந்து வெளியேற வங்கதேச அரசு அனுமதிவழங்கிவிட்டதாகவும், ஆனால் இந்திய அரசுஅவர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மாணவர்கள் அனைவரும் இந்திய அரசின் நிர்வாகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

;