tamilnadu

img

வேலம்மாள் கல்விக் குழும சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

சென்னை,ஜன.24- வேலம்மாள் கல்விக் குழுமத்தில் வரு மானவரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத  400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள்  ரூ.2 கோடி ரொக்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கல்விக் குழுமத்தில் தொடர்ந்து நன்கொடை பெறப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படை யில், தமிழகம் முழுவதும் அக்குழு மத்தினருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, ஆசிரமம் உள்ளிட்ட 60 இடங்களில்  வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சோதனை நடத்தினர். 4 நாட்களாக நடைபெற்ற சோதனை யின் முடிவில் கணக்கில் வராத ரூ.2 கோடி  ரொக்கமும், 400 கோடி ரூபாய் சொத்துக்க ளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக் கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

;