விழுப்புரம், ஜூன் 8- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட கூனிமேடு மீனவ குப்பத்தைச் சேர்ந்த மோகன் மகள் மோனிஷா (18) நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்து வாலிபர் சங்கத்தின் மாநி லப் பொருளாளர் தீபா தலை மையில் புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த், விழுப்பு ரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் வழக் கறிஞர் அறிவழகன், மாண வர் சங்க மாவட்டச்செய லாளர் அபுபக்கர் சித்திக், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் பார்த்திபன், துணைத்தலைவர் வழக்கறி ஞர் பாலமுருகன் உட்பட வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் வெள்ளியன்று நேரடி யாக கூனிமேடு மீனவ குப்பத் தில் உள்ள மோனிஷாவின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தை மோகனை சந்தித்து ஆறுதல் கூறினர். வாலிபர் சங்கம் என் றும் உங்களுக்கு உறுதுணை யாக நிற்கும் என்றும் அவரி டம் கூறினர்.அப்போது மோனிஷாவின் தந்தை மோகன் கூறுகையில், “தைரியமான என் மகளை இழந்து விட்டேன் அதற்குக் காரணம் இந்த தமிழக அரசு தான், நீங்கள் நீட் தேர்வை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றீர்கள், இனிமேலும் தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் என் மகள் போன்ற நிலை யாருக்கும் வரக் கூடாது அதற்கு வாலிபர் சங்கம் தமி ழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார்.