tamilnadu

img

தோழர் கே.கலியன் குடும்பத்துக்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்.... நிதி உதவி....

விழுப்புரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் கே.கலியன் கடந்தமாதம் 26 ஆம் தேதி காலமானார்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள தோழர் கலியனின் இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆகஸ்ட் 10 செவ்வாயன்று நேரில் சென்று கலியனின் மனைவி தேன்மொழி, மகன்கள், மகள், உற வினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், கட்சி சார்பில் குடும்ப உதவி நிதியாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை தோழர் கலியனின் மனைவி தேன்மொழியிடம் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போது அவரது மகள் கல்பனா, மகன்கள் குரு, ஸ்டாலின் மருமகன் தமிழரசன் மற்றும் குடும்ப உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துகுமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன், ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.புருசோத்தமன், பி.சௌந்தரராஜன்,கே.சுந்தரமூர்த்தி, என்.பழனி, கே.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;