tamilnadu

img

ஆர்.முத்துப்பெருமாள் குடும்பத்தினருக்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

நாகப்பட்டினம், ஆக.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர், நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோழவித்தியா புரம் தோழர் ஆர்.முத்துப்பெருமாள் கடந்த 31.7.2019. அன்று காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கீழையூர் ஒன்றியச் செயலா ளர், கடலோரப் பிரதேசக் குழுச் செய லாளர், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சோழவித்தியாபுரம் ஊரா ட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஏற்று இயக்கத் திற்கும் மக்களுக்கும் சேவை செய்த வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்  ணன், புதன்கிழமை, சோழவித்தியா புரம், தோழர் ஆர்.முத்துப்பெருமாள் இல்லம் சென்று, மறைந்த தோழரின் துணைவியார் உஷா, மகன் ராஜகோபா லன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறு தல் தெரிவித்தார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனுடன் மாவட்டச் செயலா ளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பி னர் வி.மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிர மணியன், சிபிஎம் கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித் தார்த்தன், எம்.நடராஜன், எஸ்.தமிழ்ச் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;