கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக முடக்கம் காரணமாக ஊடகத்துறை கடுமையான இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக அச்சு ஊடகங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. பத்திரிகையின் உற்பத்தி செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து முழுமையாக இயங்காததாலும் விநியோக செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த நிலையில் தீக்கதிர் ஏட்டின் பக்கங்களை தற்காலிகமாக குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே 17.6.2020 முதல் தீக்கதிர் 6 பக்கங்களுடன் வெளிவரும். தீக்கதிரை நடத்துவதில் ஏற்பட்டுள்ள பெரும் சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்த முடிவினை பொறுத்துக் கொண்டு வாசகர்கள், முகவர்கள், விளம்பர தாரர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கி றோம். இது காலத்தின் கட்டாயத்தால் எடுக்கப்பட்ட கசப்பான முடிவு. நிலைமை சீரானவுடன் மீண்டும் முழுமையான பக்கங்களுடன், அனைத்து அம்சங்களுடன் தீக்கதிர் வெளிவரும் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம்.
முதன்மை பொது மேலாளர்