tamilnadu

img

விழுப்புரத்தில் பெரியார் சிலையை சேதம்

விழுப்புரம், ஏப்.1- விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நீடித்தது. விழுப்புரம் நகராட்சி பகுதிக்குட்பட்டது கீழ்பெரும்பாக்கம். இங்கு 1995ஆம் ஆண்டில் பெரியார் நல விரும்பிகள்,பெரியார் பெயரில்  ஒரு நூலகம் திறந்த னர். அந்த நூலகம் இன்று வரை பராமரிக்கப்பட்டு, இயங்கி வருகிறது. அந்த நூலக வாயிலின் முகப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஒரு பெரியார் சிலை  அமைக்கப்பட்டது. இந்த  சிலையை உயர் கல்வி  அமைச்சர் க. பொன்முடி அன்றைக்கு திறந்து வைத்தார். அன்றிலிருந்து அந்த சிலை இரும்பு கூண்டுக்குள் பராமரிக்கப் பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.  இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெரியார் நல விரும்பிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, சிலையை  தேசப்படுத்திய விஷமிகளை  உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து சிறை யில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற் கிடையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத் துக்கு வந்த பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.