விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தினர் சாதராண ஏழை, எளிய உழைப்பாளி மக்களிடம் ஆசைவார்த்தை கூறி கடனை வழங்குகின்றனர்.
பின்பு, அதை வட்டியுடன் வாரந்தோறும், 15 நாட்கள் மற்றும் மாதம் ஒருமுறை என வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்து. இதனால், ஏழை, எளிய மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் கொடுத்த கடனை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டும் எனவும், மறுத்தால்அபராத வட்டி செலுத்த வேண்டும் எனவும்நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். மேலும்பல இடங்களில் தகாத வார்த்தைகளால் பெண்களை திட்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நுண்நிதி நிறுவனங் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி, மாவட்டச்செயலாளர் எஸ்.தெய்வானை மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.