tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்- ஓய்வூதியர்கள்

விருதுநகர்: 
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினர்.

விருதுநகர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏராளமான தொழலாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஒப்பந்த ஊழியர்கள் குடும்பங்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், பி.எஸ்.என்.எல்.இ.யு மற்றும் ஏ.ஐ.பி.டி.பி.ஏ சார்பில் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் பல  சரக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.

விருதுநகர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிங்காரவேல், இளமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  சங்க நிர்வாகிகள் சமுத்திரக்கனி, முத்துச்சாமி, ஜெயக்குமார், அஸ்ரதீன், பெருமாள்சாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
 

;