சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன் பட்டி பட்டாசு ஆலையில் கடந்த 19ம் வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளளது.