tamilnadu

img

விருதுநகரை மிரட்டும் கொரோனா... பாதித்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்வு

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32  ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏப். 23 வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள  குன்னூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் 33 வயதுடைய பெண் ஒருவருக்கு  வைரஸ் தொற்று இருப்பது வெள்ளியன்று கண்டறியப்பட்டது. 

மேலும் அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருக்கும், விருதுநகர் அருகே உள்ள குமராபுரத்தைச்  சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கும் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்நத மருத்துவரின் மகன்கள் இருவருக்கும், கன்னிசேரி புதூரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் மற்றும் 28 வயது இளம் பெண் மற்றும் மேலசின்னையாபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, குல்லூர்சந்தை அருகே இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 66 வயது முதியவர், குமராபுரத்தைச் சேர்ந்த 47 வயது ஆண் என 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை  கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.
 

;