திருவண்ணாமலை, நவ. 22- திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள குளத்தில், நீச்சல் கற்றுக் கொள்ள சென்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் குளத்தில் மூழ்கி பலியானார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ளது சிம்ம தீர்த்தக் குளம். இந்த குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்வ தற்காக, வாலிபர் மோகன், காற்றடைத்த டியூபை கையில் எடுத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதை யடுத்து, அவரின் உடைகள் மற்றும் செல்போன் நீண்டநேர மாக, குளத்தின் கரையில் இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். நீச்சல் பழகச் சென்ற யாரோ, குளத்தில் மூழ்கியிருக்க லாம் என யூகித்த மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தக வல் தெரிவித்துள்னர். பின்னர், இரவு முழுவதும் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். வெள்ளி யன்று(நவ.22) காலை தேடுதலுக்கு பிறகு, மோகனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.