tamilnadu

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், ஆக. 30- கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:  2020 - 21ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு  மேலாண்மை பட்டயப் பயிற்சி, கணிணி மேலாண்மை  மற்றும் நகை மதிப்பீடும், அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய பட்டயப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை  விண்ணப்பங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றி யத்தின் இணையதள முகவரியிலிருந்து வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 5.30 மணி வரை  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூரியர், பதிவு  தபால்கள் மூலமாக மட்டுமே கூட்டுறவு மேலாண்மை  நிலையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்தப் பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண்,  பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சிக் காலம் 9 மாதங்கள். பயிற்சிக் கட்டணம் 14,850 ரூபாய். மேலும் விவரங்களுக்கு கூட்டுறவு மேலாண்மை நிலையம், எல்லிஸ் சத்திரம் சாலை, திருச்சி பிரதான  சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியிலோ அல்லது 04146 -259467 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.