tamilnadu

வைரஸ் பாதிப்பு: கோடம்பாக்கமும் ஆயிரத்தை கடந்தது

சென்னை, மே 18- சென்னை மாநகராட்சியில் ராயபுரம்  மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்தி லும் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில்  தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மூன்று கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக் கப்பட்ட போதிலும், கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. இச்சூழலில், வரும்  31ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊர டங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்  படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நட வடிக்கை களைக் கையாண்டு வருகிறது. இருப்பினும், தினசரி தொற்று பரவல் தீவிர மாகிக் கொண்டே செல்கிறது.

இதுவரை சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,750ஆக உள்ளது. ஏற்க னவே ராயபுர மண்டலத்தில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தி ருந்த நிலையில், தற்போது கோடம்பாக் கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை ஆயி ரத்தைத் தாண்டியுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள பட்டியலில் ராயபுரம் மண்டலத்தில் 1,185  பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,041 பேரும், திரு.வி.க. நகரில் 790 பேரும், தேனாம்பேட்டை யில் 746 , தண்டையார் பேட்டையில் 581, அண்ணா நகரில் 554, வளசரவாக்கம்  522  பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப் பிடப்பட்டுள்ளது.

;