விருதுநகர், ஜூன் 7- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜூன். 5-ஆம் தேதி 158 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் வீடுகளில் உள்ளவர்கள், தொடர் பில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், சிவ காசி அம்மன் நகரைச் நேர்ந்த 30 வயது பெண், அவரது தங்கை, விருதுநகர் அருகே சுப்பையாபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் 98 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி யுள்ள நிலையில் 63 பேர் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.