விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது: ரவிக்குமார் எம்பி
விழுப்புரம், அக்.4-விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது என்று மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தி யிருக்கிறார். இது குறித்துமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவல கத்தை மூடிவிட்டு, கடலூர் அலுவலகத்தோடு இணைக்க மத்திய அரசு இம்மாதம் 1 ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளது. இந்த அலுவலகம் விழுப்புரம் பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் காரணமாக 1977ஆம் ஆண்டு விழுப்புரத்தில் வருமானவரித் துறை அலுவலகம் கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை கள்ளக்குறிச்சி, ஆரணி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்க ளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் இந்த அலுவலகத்தை மூடுவதாகவும் கடலூர் அலுவலகத்தோடு இதை இணைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் தமது வருமான வரி தொடர்பான நடைமுறைகளுக்காக 200 கிலோ மீட்டர் தூரம் அளவுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் பகுதி யில் தொடர்ந்து இந்த அலுவலகம் செயல்பட வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கை யைக் கருத்தில் கொண்டு விழுப்புரம் அலுவலகத்தைக் கடலூரோடு இணைக்கும் முடிவை திரும்பப் பெற்று இந்த அலுவலகம் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது
பொன்னேரி,அக்.4-பொன்னேரி அருகே வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியை அடுத்த திருவேங்கடபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். கூலி தொழிலாளி. வெள்ளி யன்று (அக்.4) காலை அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் பீரோ வில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல்வேறு சான்றி தழ்களும் தீயில் எரிந்து நாசமானது.