விழுப்புரம், ஜூன் 20- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்டது புராண சிங்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி புதுச்சேரி யூனியன் பிரதேச எல் லையை ஒட்டிய பகுதியாகும். இங்குள்ள 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய் யப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி யின் காரணமாக கடந்த 2 மாதங்களாக முறையாக குடி நீர் வினியோகம் செய்யப்பட வில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் அந்த பகுதி மக்கள் அவதிப் பட்டு வந்தனர். இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றக்கூடிய மின் மோட்டார் பழுதானது. இதனால் முற்றிலும் குடிநீர் வினியோகம் தடைபட்டது. எனவே மின் மோட்டார் பழுதை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள், சம்பந் தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறை யிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் காலிகுடங்களுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பகுதிச் செயலாளர் ஆர்.அன்புமணி தலைமை யில் 200க்கும் மேற்பட்டோர் திருக்கனூர், புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் காவல் துறையினர் மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மின் மோட்டார் பழுதை சரி செய்து குடிநீர் பிரச்ச னையை தீர்க்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.உலக நாதன், வி.சங்கர், கே.வீர மணி, கிளைச் செயலாளர்கள் ஜெ.முத்து, சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.