சிவகங்கை, பிப்.6- சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகாவில் தலித் இளைஞர் சண்முகம் (25) என்பவர் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை யாளியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறவமங்கலம் அருகே மருதமங்கலம் அழியாதிரும்பல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா மகன் சண்முகம் (25). இவர் மறவமங்கலம் அருகே கருவேல் காட்டுக் குள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்ய வலி யுறுத்தி கிராம மக்கள் மறவமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன், ஒன்றிய செயலா ளர் தென்னரசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் திருநாவுக்கரசு, பொன்னுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், முத்துராஜா, வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து கொலை தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.