tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பயன்பாட்டுக்கு வந்தது அங்கன்வாடி மையம்

விழுப்புரம், ஜூலை 26- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட அன்னமங்கலத் தில் கடந்த 2018ஆம் ஆண்டு ரூ. 8.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் தலையீட்டால் அந்த மையம் உடனடியாக மூடப்பட்டது. மூடிகிடக்கும் அங்கன்வாடி மையத்தை திறந்து குழந்தைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல்மலையனூர் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் சார்பில்  அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தொடர் போராட்டம் நடை பெற்றது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த ஜூன் 15ஆம் தேதி செய்தி வெளி யானது.  இந்நிலையில் வெள்ளியன்று (ஜூலை 26)  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அன்ன மங்கலத்தில் பூட்டிக் கிடந்த அங்கன்வாடி மையத்தை திறந்து குழந்தைகள் பயன் பாட்டுக்கு கொண்டுவந்தனர். இதனை அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கத்தினர், கிராமத்தினர் வர வேற்றனர்.