சாத்தூர், மே 19- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது இ.எல்.ரெட்டியபட்டி. பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பொன்குமார்(30). இவர் இந்திய ராணு வத்தில் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளதாகக் கூறப்படு கிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இத னால், மனமுடைந்த பொன்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். ஏழாயிரம்பண்ணை காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.