ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்தக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் விழுப்புரம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பும் பிரம்மாண்ட மறியல் போராட்டம் நடைபெற்றது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். மண்டலச் செயலாளர் ஆர்.சிவராஜ் தலைமை தாங்கினார். மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெயசங்கர், மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல், மாநிலச் செயலாளர் கே.காங்கேயன், மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக தலைமை பொறியாளருடன் சங்கத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
*******************
வேலூர் காந்தி நகரில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மண்டலச் செயலாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் என்.காசிநாதன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகிகள் எஸ்.ஜோதி, பி.ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.