அவிநாசி, நவ. 17- அவிநாசியில் அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து விதைப் பந்துகள் தயாரிக்கும் பணி சனிக்கிழமை துவங்கப்பட்டது. அவிநாசியின் பிரதான நீராதாரக் குளங்களான தாமரைக்குளம், சங்கமாங்குளம் உள்ளிட்ட குளங் களில் விதைப் பந்துகள் இடுவதற்காக பேரூராட்சி நிர்வாகத்தினர், அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து விதைப் பந்துகள் தாயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். அவிநாசி வளம் மீட்பு பூங்காவில் துவங்கப்பட்ட இப்பணியில், முதல் நாளான சனிக்கிழமை அவிநாசி கைகாட்டி புதூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட் டனர். இதில் செம்மண், இயற்கை உரம் கலந்து இயல் வாகை, வேம்பு, புங்கன், தான்றிக்காய், மலை வேம்பு உள்ளிட்ட விதைப் பந்துகள் தயாரிக்கப் பட்டன. 10 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டதில், ஒரு மாத காலத்திற்குள் பணி நிறைவு செய்யவுள்ளனர். இதைத்தொடர்ந்து, உப்பிலிபாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்தமாணவர்கள் வாரந்தோறும் பங்கேற்க வுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து விதைப் பந்து தாயாரிக்கும் பணி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.