விருதுநகர், ஜூன் 23- விருதுநகர் மாவட்டத்தில் 15,269 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19 கோடியே 44 இலட்சத்து 45 ஆயிரத்து 230 மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ள பாதிப்புத்தன்மை உள்ள வர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக் கான உபகரணங்கள். உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கடு மையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 750 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் பராமரிப்பு உத வித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றிய 5852 பேருக்கு ரூ.10 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரம், தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட 140 பேருக்கு ரூ.24 லட்சத்து 30 ஆயிரம், தொழு நோயால் பாதிக்கப்பட்ட 225 பேருக்கு ரூ.28 லட்சத்து 80 ஆயிரம், வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் 1813 பேருக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 400 மதிப்பில் நிவாரணம், கல்வி உத வித் தொகை வாங்கும் திட்டத்தின் கீழ் 2570 பேருக்கு ரூ.97 லட்சத்து 34 ஆயிரம், செவித்திறன் பாதிக்கப்பட்ட 89 குழந்தை களுக்கு ஆரம்ப பயிற்சி மற்றும் செயல் பாடுகளுக்காக ரூ.12 லட்சத்து 88 ஆயி ரம், மனவளர்ச்சி குன்றிய 200 குழந்தை களுக்கு ரூ.32 லட்சத்து 16 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
65 நபர்களுக்கு ரூ.83,820 மதிப்பில் பிரெய்லி கைக்கடிகாரங்கள், 250 நபர் களுக்கு ரூ.8,05,00 மதிப்பில் காது கேட் கும் கருவிகள், 187 பேருக்கு ரூ.8,54,200 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், 177 பயனாளிகளுக்கு ரூ.29,48,000 மதிப்பிலும், 16 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் ரூ.1,40,000 மதிப்பிலும், 21 நபர்களுக்கு ரூ.15,64,500 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி களும், பார்வையற்ற 200 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.6,28,000 மதிப்பில் மடக்குக்குச்சிகளும் என மாவட்டத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 15,269 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19 கோடியே 44லட்சத்து 45 ஆயிரத்து 230 டி மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள் ளன.