tamilnadu

img

ஆசிய- பசிபிக் பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தை திரும்பப் பெறுக

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நவ. 4-  ஆசிய-பசிபிக் பிராந்திய பொரு ளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்தி டுவதை கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் சார்பில் திங் களன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

மத்திய அரசு ஆசிய- பசிபிக்   பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகளு டன் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இதனால் விவசாயிகள் விளைவிக்கும் அனைத்துப் பொருட்களும் பன் னாட்டு நிறுவனங்கள் எவ்வித இறக்குமதி வரியுமின்றி இந்திய சந்தைகளில் இறக்கமதி செய்யும் நிலை ஏற்படும். மேலும் இந்த ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டால் பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி,  தானியங்கள், பழங்கள், உணவு, எண்ணெய் இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும். இதனால் இந்திய விவசாயம் பாதிப்பிற்குள்ளாகும்.இந்திய சந்தை முழுவதும் அந் நிய நாடுகளின் கைகளுக்கு சென் றுவிடும். எனவே மத்திய அரசு ஆசிய-பசிபிக் பிராந்திய ஒப்பந் தத்தில் கையெழுத்திடக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் திங்களன்று மாநிலம் முழுவதும் கண்டன இயக் கத்திற்கு அறைகூவல் விடுத்தது. 

இதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, எருமப்பட்டி கைகாட்டி உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோட் டில் மாவட்டத் தலைவர் ஏ.ஆதி நாராயணன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.மாநிலகுழு  உறுப்பினர்.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட பொருளாளர் ஆர்.வேலா யுதம், கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில துணைத் தலைவர் எஸ்.நல் லாக்கவுண்டர், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். எருமப்பட்டி கைகாட்டியில் ஒன்றியத் தலைவர் மூ.து.செல்வ ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்தை மாவட்ட குழு உறுப்பினர்  முருகேசன் துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் பி.பெரு மாள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் நாமக்கல் பிரதேச குழு செயலாளர் பி.ஜெயமணி வாழ்த்தி  பேசினார். இந்த ஆர்ப்பாட்டங்க ளில் திரளானோர் கலந்து கொண்ட னர்.