விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை மேல்மலையனூர் வட்டாட்சியர் ஆர்.செந்தில்குமார், வளத்தி காவல் ஆய்வாளர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் வட்டத் தலைவர் பி.வேங்கடபதி, செயலாளர் ஹரிஹரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.