tamilnadu

img

வட்டாட்சியரை கண்டித்து தடையை மீறி போராட்டம்-கைது

வானூர், மே 27-விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் திருவகரை பகுதியில் சங்கராபரணி ஆற்றில் மணல் , செங்கமேடு பகுதியில் செம்மண், கரசானூர்,குன்னம் ஆகிய பகுதிகளில் கருப்பு தங்கம் என கூறப்படும் கருப்பு கல் வெட்டி கடத்தப்படுகிறது. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் வட்டாட்சியர் பரமேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டா ட்சியர் அலுவலகம் முன்பாக செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தும் காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால், திட்டமிட்டப்படி மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.அர்ச்சுனன், எம்.கே. முருகன், ஆர். சேகர், எம். ராஜேந்திரன், எஸ்.பாலமுருகன், ஏ.அன்சாரி, கே.நடராஜன், பி.ராதா உள்ளிட்ட பலரும் தடையை மீறி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைவரையும் கைது செய்தனர்.

;