விருதுநகர், செப்.1- 27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்படும் என மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீத்தராமான் அறிவித் துள்ளார். பத்து பொதுத்துறை வங்கி களை நான்காக சுருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலை வாய்ப்பு வெகுவாகக் குறை யும். ஆனால் மக்களுக்கு எந்த நன்மை யும் இல்லை. வங்கிகளில் பெரும் பணக்காரர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வைத் துள்ளனர். அந்த வராக்கடன்களை மத்திய அரசு வசூலிக்க வேண்டும். கார்பரேட் கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது என வலி யுறுத்தி விருதுநகரில் வங்கி ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க வட்டாரத் துணைச் செயலாளர் ஸ்ரீவெங்கடேஷ் தலைமை வகித்தார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட ஆலோ சகர் மாரிக்கனி, கிளைச் செயலாளர் எஸ்.ரமேஸ்பாபு உட்பட ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.