சுவேத நதியில் வெள்ளப் பெருக்கு:
சேலம், டிச.3- சுவேத நதியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியும் வீரகனூா் ஏரிக்குச் செல்லும் வாய்க்கால் தூா்வாரப்படாததால் ஏரி நீா் வீணாவதை தடுக்கக்கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் ஏரியை சீரமைக்க சுமார் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில், தமிழக அரசு நிதி ஒதுக்கி இருந்தது. இருப்பினும் குடிமரா மத்துப் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர் பாக மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், கரையை பலமாக அமைக்க வேண்டும். உள்ளூரில் இருக்கும் இயந்திரங்களை கொண்டே பணி களை செய்ய வேண்டும். முதலில் மதகு களை சீரமைத்து, ஏரிக்குள் நீா் வந்தால் வெளியே வராதவாறு அனைத்து மதகு களையும் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூறப்பட்டிருந்தன. இந்நிலையில் திங்க ளன்று சுவேத நதியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இதில் தெடாவூா் அருகே ஏரிக்கு நீா் வரும் வாய்க்கால் தூா்வாரப் படாமல் நீா் ஏரிக்கு வருவது தடைபட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறிய தாவது, ஏரிக்கு நீா் வரும் வாய்க்கால் பாதை தூா்வாரப்படவில்லை. இதனால் ஏரிக்கு நீா் வருவது தடைபட்டுள்ளது. மேலும், வீர கனூா் ஏரிக் கடைக்கோடியில் உள்ள தடுப்புகள் உடைந்து விட்டதால், ஏரி நிரம்பி னாலும் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்தில் நீா் புக வாய்ப்புள்ளது. ஆறு நிறைய வெள்ளநீா் சென்றும், வீரகனூா் ஏரிக்கு தண்ணீா் வராததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனா். எனவே மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து துரித நடவ டிக்கை எடுத்து வீரகனூா் ஏரிக்கு நீா் சேமித்து இப்பகுதி மக்களின் வாழ்வாதா ரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.