tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்திடுக

விழுப்புரம், ஜூன் 1- பெண்கள் மீதான பாலியல் வன்முறை களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் விழுப்புரத்தில் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  மத்திகிரி குதிரைப்பாளயத்தில் கிளைச் செய லாளர் புனிதா தலைமையிலும், நேதாஜி  நகரில் கிளைச் செயலாளர் நித்யஸ்ரீ தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா, ஜான்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே ராஜாசூடாமனி கிராமத்தில் கிளைச்  செயலாளர் சுசிகலா தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பி னர் ஜெயந்தி, வட்டச் செயலாளர் ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரெட்டி யூரில் கிளைச் செயலாளர் துர்காதேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் சுதானா நக ரில் பிரதேச தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாடத்தில் அகில இந்திய துணைத் தலைவர் சுதாசுந்தரராமன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். முத்தியாள் பேட்டை சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் பிர தேசச் செயலாளர் சத்தியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;