வாலிபர் சங்கம் ஆவேசம்
கோவை, டிச. 17- மக்கள் ஒற்றுமையை சீர்குலைக் கும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் செவ் வாயன்று இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகி றது. இதன்ஒருபகுதியாக கோவை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் கண் டன உரையாற்றினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மத் திய அரசின் குடியுரிமை சட்ட திருத் தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகர், விவேகானந்தன், மணிபாரதி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.