tamilnadu

மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிப்பு: 100 நாள் வேலை தருவதாக அதிகாரிகள் உறுதி

விழுப்புரம், பிப்.19- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மலையனூர், சிந்தனைபூண்டி,கரடிகுப்பம், கணபதி புரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத்திற னாளிகள் 100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  வட்டத் தலைவர் ஷெரிப் தலைமையில் புதனன்று (பிப்.19) மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் வேலை வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தல் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் டி.முருகன், ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வியாழக்கிழமை முதல் மேல்மலைய னூர், சிந்தனைபூண்டி ஆகிய ஊராட்சியில் வேலை வழங்கு வதாகவும், வரும் வாரத்தில் கரடிகுப்பம், கணபதிபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு வேலை வழங்குவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.