நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
திருவில்லிபுத்தூர், அக்.13- விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி காவல்துறை யினர் திருட்டு வழக்கு தொ டர்பாக குற்றவாளிகளைத் தேடி திவில்லிபுத்தூர்- இராஜ பாளையம் சாலையில் உள்ள வேலங்குளம் கண்மா ய்க்கு சென்றனர். அப்போது ஒரு துணிப்பையில் பத்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நான்கு கொ ய்யாப் பழங்களும் முள் புதரில் கிடந்தது. இதைக் கைப்பற்றிய காவல்து றையினர் விருதுநகர் வெடி குண்டு தடுப்பு மற்றும் செய லிழப்பு பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் வெடிகுண்டுகள் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் மதுரை வெடிகுண்டு செய லிழப்பு சிறப்புப் பிரிவு காவ ல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சிலைகள் கொள்ளை
மதுரை, அக்.13-- மதுரை விக்கிரமங்க லத்தை அடுத்துள்ளது வி.கோ வில்பட்டி. இங்கு பழமை வாய்ந்த மருதோய ஈஸ்வர முடையார் கோவில் உள்ளது. சனிக்கிழமை இரவு இந்தக் கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 65 கிலோ எடை யுள்ள சிவனேசவல்லி (சிவன் பார்வதி) ஆகியோர் ஐம்பொன் சிலையை அடை யாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். ஞாயிறன்று அதி காலை 4.30 மணிக்கு கோவி லுக்கு வந்த பூசாரி கருத்த பாண்டி சிலைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிர மங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அவ ர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.