tamilnadu

தரமற்ற நெல் விதையால் விவசாயிகள் பாதிப்பு

செஞ்சி, ஜூன் 10- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  வட்டம் அப்பம்பட்டு, கோனை உள் ளிட்ட சுற்றுப்புற பகுதியில் விவசா யிகள் நாற்றுக்காக விட்ட விதை நெல் தரமற்றதாக இருந்ததால் முளைக் கவில்லை விவசாயிகள் நஷ்டம டைந்துள்ளனர். கோனை கிராமத்தை சேர்ந்த ஏழு மலை என்ற விவசாயிக்கு சொந்த மான 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிர்  செய்வதற்காக செஞ்சியில் உள்ள  ஒரு தனியார் உர விற்பனையாளரிடம் ஏடிடி 43 என்ற நெல் ரக விதையை வாங்கியுள்ளார். 30 கிலோ மூட்டை 1,200 ரூபாய் என 2 மூட்டை வாங்கி  தனது நிலத்தில் கடந்த 20 நாட்க ளுக்கு முன்பு நாற்று விட்டுள்ளார். நாற்று விட்டு 20 நாட்கள் ஆனபிறகு மூன்றில் ஒரு பங்கு விதை மட்டுமே  முளைத்துள்ளது. இதுகுறித்து அவர் செஞ்சி வேளாண்துறை அலுவ லரை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.

இதனை தொ டர்ந்து செஞ்சி வேளாண் துறை யைச் சேர்ந்த சுதாகர் நேரில் ஆய்வு  மேற்கொண்டு, இதுகுறித்து  விழுப்பு ரம் விதை சான்று அளிக்கும் அலுவ லருக்கு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல் விழுப்புரம் மாவட் டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற நெல் விதைகளால்  பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தி டம் புகார் தெரிவித்தார். எனவே தனி யார் விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகள் தரமானதா என ஆய்வு செய்து, சான்று பெற்ற விதை களை மட்டுமே விற்பனை செய்ய  வேளாண்துறை நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும், அனைத்து வேளாண் பிரிவு அலுவலகங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான பரு வத்திற்கு ஏற்ற அனைத்து ரக நெல்  உள்ளிட்ட விதைகளை கையிருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.