tamilnadu

img

தரமற்ற நெல் விதையால் விவசாயிகள் பாதிப்பு

செஞ்சி, ஜூன் 9- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அப்பம்பட்டு,  கோனை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் விவ சாயிகள் நாற்றுக்காக விட்ட விதை நெல் தரமற்ற தாக இருந்ததால் முளைக்கவில்லை விவசாயிகள்  நஷ்டமடைந்துள்ளனர். கோனை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்ற விவ சாயிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிர்  செய்வதற்காக செஞ்சியில் உள்ள ஒரு தனியார் உர  விற்பனையாளரிடம் ஏடிடி 43 என்ற நெல் ரக விதையை வாங்கியுள்ளார். 30 கிலோ மூட்டை 1,200  ரூபாய் என 2 மூட்டை வாங்கி தனது நிலத்தில் கடந்த  20 நாட்களுக்கு முன்பு நாற்று விட்டுள்ளார். நாற்று விட்டு 20 நாட்கள் ஆனபிறகு மூன்றில் ஒரு பங்கு விதை  மட்டுமே முளைத்துள்ளது. இதுகுறித்து அவர் செஞ்சி  வேளாண்துறை அலுவலரை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செஞ்சி வேளாண் துறையைச் சேர்ந்த சுதாகர் நேரில்  ஆய்வு மேற்கொண்டு, இதுகுறித்து  விழுப்புரம் விதை  சான்று அளிக்கும் அலுவலருக்கு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற நெல் விதை களால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். எனவே தனியார் விற்பனையாளர்கள் விற்பனை  செய்யும் விதைகள் தரமானதா எனஆய்வு செய்து, சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய  வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து வேளாண் பிரிவு அலுவலகங்க ளிலும் விவசாயிகளுக்கு தேவையான பருவத்திற்கு ஏற்ற அனைத்து ரக நெல் உள்ளிட்ட விதைகளை கையிருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்  என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.