விழுப்புரம், ஆக.22- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரெட்டணை கிராமத்தில் தொண்டி ஆற்றின் நடுவே சேதமான தடுப்பணையை பருவ மழைக்குள் சீரமைக்காவிட்டால் மக் களை திரட்டி மறியல் போராட்டம் நடத்து வேன் என சட்டமன்ற உறுப்பினர் மாசிலா மணி கூறினார். திண்டிவனம் அருகே ரெட்டணை கிரா மத்தில் உள்ள தொண்டி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட தடுப்பணையை மயிலம் தொகுதி திமுக எம்எல்ஏ மாசிலாமணி பார்வை யிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “ரெட்டணை கிராமத்தின் வழியே செல்லும் தொண்டி ஆற்றின் குறுக்கே கடந்த 2014 ஆம் ஆண்டு 8 கோடி ரூபாய் செலவில் தடுப்பனை கட்டப்பட்டது. அந்த அணை ஒரு வருடம்கூட தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்த ஆண்டில் வந்த வெள்ளத்தால் சேதமடைந் தது. இதனால் அதிலிருந்து மழைக் காலங்க ளில் ஆற்றில் வரும் தண்ணீர் தேங்காமல் சென்று விடுகிறது” என்றார். முப்புளி, அவ்வையார்குப்பம், நெடி மோழியனூர் உள்ளிட்ட 15 கிராம மக்களின் நீர் ஆதாரமாக உள்ள இந்த தடுப்பணையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பார்வையிட்டேன். இதுகுறித்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தக வல் கூறினேன். அதனை தொடர்ந்து அதிகாரி கள் சம்பவ இடத்துக்கு வந்து அணையை ஆய்வு செய்தனர். பிறகு, விரிசல் விழுந்த தடுப்பணை மற்றும் பழுதடைந்த ஷட்டர் ஆகியவற்றை சரி செய்வதாக அந்த அதிகாரி கள் உறுதியளித்தனர். ஆனால் ஒரு ஆண்டாகி யும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். சங்கராபரணி ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்றக் கோரியும் பல முறை பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் தொடர்பு கொண்டு தொலைபேசி மூல மாகவும் நேரிலும் தெரிவித்தும் எந்த பணி யும் நடைபெறவில்லை. வடகிழக்கு பருவ மழை காலம் துவங்க உள்ளதால் அணையை மீண்டும் ஒரு முறை பார்வையிட்டேன். இன்னும் 10 நாட்களுக்குள் அணை சீர மைப்பு பணி நடைபெறவில்லை என்றால் பாதிக்கப்படும் மக்களை திரட்டி கூட்டே ரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்துவேன் என்றும் மாசிலா மணி தெரிவித்தார்.