இராஜபாளையம், ஜூன் 6- இராஜபாளையம் அருகே குடல்புரிநத்தம் பகுதியில் முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே குடல்புரிநத்தம் பகுதியில் சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் முயல் மற்றும் காட்டு பன்றிகள் உள்ளன. இவற்றை நாய்கள் உதவியுடன் வேட்டையாடி சித்திரவதை செய்து டிக்-டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இராஜபாளையம் வனத்துறை சரக அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை காவலர்கள் குடல்புரிநத்தம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கிருந்த தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர் சிவா என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்பு, அவர் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்ததில், காட்டுப் பன்றிகளை நாய்கள் மூலம் தாக்குவ தும், இரவு நேரத்தில் ஒளிவிளக்கு மூலம் முயல்களை வேட்டையாடி பதிவிட்டு இருப்பதும் தெரிய வந்தது.