tamilnadu

img

பாக்கி பணம் கேட்டு தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

திருவண்ணாமலை, பிப். 25- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தரணி தனி யார் சர்க்கரை ஆலை கடந்த 2018 - 19  ஆம் ஆண்டுகளில் அரைவை செய்த  வகையில் விவசாயிகளுக்கு தர வேண்  டிய பாக்கி ரூ. 26 கோடி உள்ளது. பாக்கி பணத்தை வழங்கக் கோரி  விவசாயிகள் ஜி.மணி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். கரும்பு விவசயிகள் சங்க மாநில  பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன், துணைத் தலைவர் ஜனார்த்தனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்  டச் செயலாளர் வி.சுப்பிரமணி  தலை வர் டி. கே.வெங்கடேசன், பொருளா ளர் உதயகுமார், ஆலை செயலாளர் கே.பாலமுருகன்,  புதூர் பகுதிச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலை நிர்வாகம் வழங்க வேண் டிய பாக்கி ரூ. 26 கோடியை உடனே வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஆதார விலையின்படி, வழங்க வேண்டிய பாக்கி 65 கோடி ரூபாயை வழங்க  வேண்டும்,

லாபத்தில் விவசாயி களுக்கு தரவேண்டிய பாக்கி பங்கு  பணமான 15 கோடி ரூபாயை ஆலை  நிர்வாகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர், ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில், மார்ச் மாதத்திற்குள் பாக்கி பணத்தை தருவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த விவசாயிகள், ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 5 முறை  பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் கடந்த 2020 ஜனவரி மாதத்  திற்குள் பாக்கி பணத்தை தருவதாக ஆலை நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் அதன் படி வழங்கவில்லை. எனவே விவசாயிகளுக்கு மார்ச்  மாதம் தேதியிட்டு தற்போதே காசோ லை வழங்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, செவ்வாயன்றும் தொடர்ந்த போராட்டத்தில் தீர்வு காணப்படாததால் விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட நடை பயணமாக சென்றனர். அப்போது, காவல்துறையினர் விவசாயிகள் அனைவரையும் கைது செய்தனர்.