விழுப்புரம், ஜூலை 18- ஆணவக்கொலையை எதிர்த்தும், பஞ்சமி நில மீட்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழுப்புரத்தில் 3ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் அசோக் நினை வரங்கில் நடைபெற்றது. அசோக்கின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட துணைத்தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வர வேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஜி.ராம சாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். செய லாளர் ஏ.சங்கரன் சங்கத்தின் செயல்பாடு மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து பேசி னார். மாநில துணைத்தலைவர் சி.நிக்கோலஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர், தொடரும் ஆணவபடு கொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக பஞ்சமி நிலங் களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய தலைவராக எஸ்.முத்துக்குமரன், செயலாளராக ஏ.சங்கரன், பொருளாளராக எஸ்.சவுரி உள்ளிட்ட 37 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது. இதில் மாதர் சங்க மாநில துணைச்செய லாளர் எஸ்.கீதா, மாவட்டத் தலைவர் நீலா, செயலாளர் சித்ரா, வட்டச் செயலாளர் ஆர். கண்ணப்பன், விதொச மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்டக் குழு உறுப்பினர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.