tamilnadu

img

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வலியுறுத்தல்

திருவாரூர்: பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் அதிகரித்து வரும் வன்முறையை தடுத்திடக் கோரியும், பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு உழைக்கும் பெண்கள்  ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் இரா. மாலதி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுமதி, செயலாளர் பி.கோமதி, தையல் சங்க மாவட்ட நிர்வாகி ஆர்.சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.