tamilnadu

img

குடிநீர் பிரச்சனை: ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம், ஜூன் 12-  ரிஷிவந்தியம் ஒன்றியம் முழுவதும்  தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனையை போக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்ரோடு, கடைவீதி, நாகர்கோவில், மேட்டுத் தெரு மரப்பட்டரைத் தெரு ஆகிய இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி பழுதடைந்துள்ள மினி டேங்குகளை சரி செய்து தர வேண்டும், நத்தம், மாரியம்மன் கோயில் தெரு ஆகிய தெருக்களில் ஆழ்துளை கிணறு ஆழப்படுத்த வேண்டும், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் மரூர் ஊராட்சியில் போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், ஓடியந்தல் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணற்றை மேலும் ஆழப்படுத்தி குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்,  அத்தியூர், மற்றும் கடம்பூர் ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலிறுத்தப்பட்டது. வாணாபுரம் பகண்டை கூட்டு சாலையில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.உதிரக்கோட்டி தலைமை தாங்கினார்.  விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, துணைச் செயலாளர் எம்.சிவக்குமார், பொருளாளர் ஆர்.பூமாலை, ஒன்றியத் தலைவர் பிரேம்குமார், பொருளாளர் இளையராஜா, சங்கராபுரம் வட்டச் செயலாளர் வெங்கடேசன், தலைவர் பாஸ்கர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.