tamilnadu

பேரையூரை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா தொற்று

 திருவில்லிபுத்தூர், மே 25- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுமார் 190 பேரை பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்தவர்களை வரு வாய்த்துறை சுகாதாரத் துறை அதிகாரிகள் தனிமைப் படுத்தி கண்காணித்து வருகின்றனர் 190 பேருக்கு கடந்த 22ம் தேதி ரத்த மாதிரிகள் எடுக்கப் பட்டது இதில் நூறு பேருக்கு ரத்த மாதிரிகள் முடிவுகள் வந்ததில் யாருக்கும் எவ்வித நோய்த்தொற்றும் இல்லை என்பது உறுதியானது. மீதமுள்ள 90 பேருக்கு திங்களன்று முடிவுகள் வந்தன. இதில் 89 பேருக்கு எந்த நோய் தொற்றும் பாதிப்பும் இல்லை. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கிராமம் ஒன்றினைச் சேர்ந்த மகாராஷ்டிராவில் பணியாற்றி வந்த 20 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தொற்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.