விழுப்புரம்.பிப்.23; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோ சனைக் குழுக் கூட்டம் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ஆட்சியர், “உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிவுறுத்தலின்படி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கள் மேற்கொள்ளும் ஆய்வின் போது, சட்ட விதிகளின்படி கடைகளுக்கான பதிவைச் செய்யாமல், உரிமம் பெறாமல் உணவுப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். கடைகளில் விற்பனையாகும் உணவுப் பொருள்களில் கலப்படம், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் நெகிழிப் பொருள்கள் தொடர்பான குறைகள் கண்டறியப்பட்டால், அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுதல் ஆட்சியர்அறிவுறுத்தினார். உணவகங்கள், உணவுப் பொருள்களை விற்பனை நிறுவனங்கள் அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விதிகளை மீறி பயன்படுத்துவோர் மீது, உணவுப் பாதுகாப்புத் துறையினர் சட்டப்படி அபராதம் விதித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருள்கள் கிடைக்க உணவு பாதுகாப்புத் துறையினர் விரைந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், பணிகளை மேம்படுத்தவும் கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தினார்.